தமிழகத்தில் கொரோனா பரவல் சில தினங்களில் குறைய தொடங்கும்- மருத்துவ நிபுணர்கள் தகவல்.

0

சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் 1060 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில நாட் களாகவே பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கியும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கடைத்தெருக்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் இன்று தொடங்கியது.

சென்னையில் 200 வார்டுகள் உள்ளன. இந்த 200 வார்டுகளிலும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் இன்று காலை முதல் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மத வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்றும் கண்காணித்தனர்.

மேலும் பஸ்களில் வரும் பயணிகள் முககவசம் அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் மெரினா உள்ளிட்ட சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளிலும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

Leave a Reply