காலியில் வெள்ளத்தில் மூழ்கிய பொலிஸ் நிலையம், சுங்கத் திணைக்களம்.

0

கடல் அலைகள் நிலப்பகுதியை நோக்கி கரைபுரண்டமையால் காலி சமுத்ர மாவத்தையிலுள்ள பொலிஸ் நிலையம், சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இன்று (02) மாலை வேளையில் கடல் அலை நிலப்பரப்புக்குள் ஊடுருவிய காரணத்தால், வெள்ளம் மற்றும் மணல் நிரம்பி காலி – மாத்தறை பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீன்பிடிப் படகுகளும் அலைகள் காரணமாக கரை ஒதுங்கியுள்ளதுடன், சமுத்திர மாவத்தையின் கரையும் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

Leave a Reply