அதிரடியாக வெளியானது நாட்டில் இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு!

0

இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் 3 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களுக்கும் இரவு வேளையில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் கொழும்பு நகர் பகுதிகளில் எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் காலை 6 மணிமுதல், 8 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலயங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply