திடீரென தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு! : வெளியான காரணங்கள்!

0

இன்றைய தினம் முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அஞ்சன பிரியன்ஜித் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ற வகையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும். எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஆண்டு கட்டண அதிகரிப்பு என்பனவற்றை உள்ளடக்கி பேருந்து கட்டணங்கள் 35 வீதத்தினால் உயர்த்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நாளை தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாது. என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply