இலங்கைக்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்.

0

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் U.S. International Development Finance Corporation (DFC) இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு வழங்கபடவுள்ள கடன் தொகையில் சிறிய , நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்காக இதில் 100 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்காக 15 மில்லியன் டொலர் பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் இந்த கடன் தொகையில் 5 மில்லியன் டொலர் உணவு உற்பத்தி நிறுவனமொன்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Leave a Reply