குடிநீர் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு.

0

குடிநீர் திட்டங்களின் பணிகளை விரைவில் நிறைவு செய்வது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச தலைவர் மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்திலேயே இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் தற்போது 2 ஆயிரத்து 337 நீர்வழங்கல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவை சாதகமான திட்டங்களாக அமைந்துள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் 59 இலட்சத்து 46 ஆயிரத்து 352 பேர் நன்மையடைய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply