11 நாட்களுக்குப் பின்னர் இன்று எரிவாயு விநியோகம்.

0

இலங்கையில் 11 நாட்களுக்குப் பின்னர் இன்று (15) எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதானமாக வணிக வளாகங்கள், தகன மேடைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயு இருப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறைந்த அளவில் வீடுகளுக்கு எரிவாயுவை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் நாடடை வந்தடைந்த எரிவாயு கப்பலின் எரிவாயு தரையிறக்கம் 6 நாட்களுக்கு பின்னர் நேற்று (14) ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply