முதல்-அமைச்சர் வருகை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்.

0

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரியும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் நல்லதம்பி, தேவராஜ், வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார், திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் வரவேற்க தி.மு.க. சார்பில் ஆம்பூர் ஓ.ஏ.ஆர். தியேட்டர் அருகிலும், வாணியம்பாடி பஸ் நிலையம் அருகிலும், ஜோலார்பேட்டை மெயின் ரோடு, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் வரவேற்பு அளிக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மேலும் வரும் வழிகளில் பாதுகாப்பு குறித்தும் வருகின்ற வழியில் மேடைகள் அமைத்து அதில் நடன நிகழ்ச்சிகள், பாட்டு கச்சேரி, வீர விளையாட்டுகள் நடத்த உள்ள இடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பாதுகாப்பு அம்சங்கள், முதலமைச்சர் பாதுகாப்பிற்காக வரும் கான்வாய் செல்லும் பாதை மற்றும் மேடை, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply