நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த விசேட வர்த்தமானியொன்று நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 210 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என வெளியான குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.