இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு யூரியா உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம், அடுத்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவை இந்தியாவின் தேவைக்காக ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். இலங்கை விவசாயிகள் எதிர்நோக்கும் உரத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு யூரியா உரத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.