மேலுமொரு கப்பல் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் 3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மிகுதி 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி எரிவாயுவை தரையிறக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய மேலும் 6 நாட்களுக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.



