நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் இன்று ஒரு மணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், நாளை A முதல் W வரையிலாள பகுதியில், இரவு வேளையில் ஒரு மணிநேரம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படாதெனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காலத்தில் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.