ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியின் விலை உச்சத்தை தொடுகின்றது.

0

நாட்டில் அரசாங்கம் விதித்த வரி காரணமாக பல பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் இவ்வாறு இறக்குமதி பொருட்கள் மீதான வழமையான தீர்வை வரிக்கு மேலதிகமாக 100 வீத மிகை வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்ததுள்ளது.

அத்துடன், 4 வீதத்தால் வெட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியொன்றின் விலை தற்போது 80,000 ரூபாவை விடவும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கு மேலதிகமாக அதனை பயன்படுத்தும்போது அறவிடும் தொலைத்தொடர்புகள் வரி 11.25 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply