யாழில் 15 வயது சிறுமி மாயம்.

0

யாழ்- வேலணை, சரவணை பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அவ்வாறு 15 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்
குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்றறது.

இந்நிலையில் காணாமல் போன சிறுமியை தேடும் பணியினை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவே:ளை நாட்டில் அண்மை நாட்களில் சிறுவர், சிறுமியர்கள் காணாமல் போவது அதிகரித்துள்ள நிலையில் பெற்றோர்கள் பத்ற்றத்தில் உள்ளனர்.

அதேவேளை அட்டுலுகம பகுதியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் முழு நாட்டையுமே உலுக்கியிருந்தது . அதேபோல் வவுனியாவில் காணாமல் போன 16 வயதுடைய சிறுமி மறுநாள் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி காணாமல் போயுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply