நாட்டிற்கு 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

0

நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் முதல் குறித்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் விதிமுறைகள் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு கூறியுள்ளது.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேசமயம் பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவற்றின் தேவையை கருத்திற்கொண்டு நாட்டிற்கு கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அந்நிய செலாவணியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply