இலங்கையிலிருந்து மேலும் மூவர் தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

0

தற்போது இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை வருகின்றது.

இதன் பிரகாரம் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இதன் காரணத்தால் இலங்கையிலுள்ள பல மக்கள் தமிழகத்தில் புகழுடம் கோரி செல்கின்றனர்.

இந்நிலையில் இலங்கையிலிருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தமிழகம் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக படகு மூலம் பயணித்தவர்கள், இன்று காலை தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கடற்கரையே சென்றடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் சிறுவர் ஒருவர் உட்பட இரண்டு ஆண்களும், ஆண் ஒருவருமே இவ்வாறு தமிழகம் சென்றுள்ளனர்.

குறித்த இலங்கையர்களை மீட்ட கரையோர காவல்துறையினர் , ராமேஸ்வரம் கரையோர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தற்போது வரையில் 70க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இந்தியாவிற்கு தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply