20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர தகவல்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் டாக்டர் டினு குருகே தெரிவித்தார்.

அதேசமயம் நான்காவது டோஸை செலுத்திக்கொள்ளவுள்ளவர்கள் , கொரோனா வைரஸுக்கு எதிரான முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களை பெற்றிருத்தல் வேண்டும்.

அத்துடன் , கடைசி தடுப்பூசி செலுத்தி மூன்று மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.

மேலும் , 20 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும், நோயெதிர்ப்பு குறைபாடு மற்றும் நாள்பட்ட கோளாறுகள் உள்ளவர்களுக்கும் நான்காவது டோஸ் பரிந்துரைக்கப்படுகின்றதாக டாக்டர் குருகே மேலும் தெரிவித்தார்.

Leave a Reply