இன்று முதல் அமலுக்கு வரும் சுற்றுநிருபம்.

0

இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மாத்திரமே பணிக்கு அழைக்கப் படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கான சுற்று நிருபத்தை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டது.

அத்துடன் எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் உருவாகியுள்ள பிரச்சனை காரணமாக பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் உரிய முறையில் செய்யப்படவில்லை.

இதன் பிரகாரம் அரச உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகம் அளிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

அத்துடன் குறித்த நெருக்கடி காலப்பகுதியில் எரிபொருள், மின்சாரம் மற்றும் நீர் இந்த வெற்றிக்காக அரச செலவுகளை மட்டுப்படுத்த வேண்டியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மீள் அறிவித்தல் வரை அரச நிறுவனங்களினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்களை பணிக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரச நிறுவனங்களின் பிரதானிகள் அனுமதியுடன் அத்தியாவசிய சேவையாளர்கள் மாத்திரம் பணிக்கு அழைக்க முடியும்.

மேலும் அத்தியாவசியச் அரச சேவைகளை பேணுவதற்கு இந்த செயற்பாடு தடையாக இருக்கக்கூடாது எனினும் அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply