வாடகை வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும், சொந்த வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் முதலில் ஒரு புதிய இடத்திற்கு குடி போகும் பொழுது, அங்கு இருக்கக்கூடிய அக்கம்பக்கத்தினர் நம்மிடம் நல்ல படியாகத்தான் நடந்து கொள்வார்கள்.
ஆனால் சில காலங்கள் சென்ற பிறகு அவர்களுக்கு நம்மிடம் சில பொறாமை எண்ணங்கள் ஏற்படும்.
எந்தவித காரணம் இல்லாமலேயே அவர்கள் நம்மிடம் அடிக்கடி முரண்பாடாக நடந்து கொள்வார்கள்.
இதற்கு காரணம் நீங்கள் வாழும் நல்ல வாழ்க்கையாக கூட இருக்கலாம்.
அவர்களால் இப்படி வாழ முடியவில்லையே என்று சிலர் பார்க்கும் பார்வையும் நமக்கு திருஷ்டியாகவும், எதிர்மறை ஆற்றலாகவும் மாறி விடுகிறது.
இதனால் நமது வீட்டிலும் அடிக்கடி பிரச்சினைகள் உண்டாக ஆரம்பிக்கிறது.
இவற்றை நம்மிடம் இருந்து விரட்டியடிக்க இந்த வசம்பு தீபத்தை ஏற்ற வேண்டும்.
அதற்கு முதலில் ஒரு பெரிய அகல் விளக்கு, 6 நெல்லிக்காய் விதை, சிறிய துண்டு வசம்பு, வேப்ப எண்ணெய், ஒரு சிறிய தாம்பூலத் தட்டு மற்றும் ஒரு சிட்டிகை வசம்பு பொடி இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாம்புல தட்டில் இருக்கும் அகல் விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்துக்கொண்டு, தட்டின் மீது அகல் விளக்கை வைக்க வேண்டும்.
பிறகு அதனை வீட்டின் தென்மேற்கு திசையில் வைத்து விடுவார்கள். பிறகு இதில் வேப்ப எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
அகல் விளக்கில் 6 நெல்லிக்காய் விதை மற்றும் சிறிய துண்டு வசம்பையும் சேர்க்க வேண்டும்.
பிறகு இதனுடன் ஒரு சிட்டிகை வசம்பு பொடியையும் சேர்க்க வேண்டும்.
பின்னர் இந்த விளகைச் சுற்றி வாசனை மலர்களை தூவி விடவேண்டும். பிறகு விளக்கின் முன் ஒரு 15 நிமிடம் அமர்ந்து கொண்டு, குலதெய்வம் அல்லது உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்கள் செய்துவர உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக விலகிவிடும்.