வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு.

0

கொழும்பில் மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் இதுவரை ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 719 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல் நிலைய ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் , மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply