கத்தி குத்து – ஒருவர் பலி.

0

நபரொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம்
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் ஆமர் வீதி அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்தில் ஆமர் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply