பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவுக்கு விடுத்த அழைப்பு.

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் தற்போதைய நெருக்கடியான நேரத்தில் நமது பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தை ஒதுக்கிவிட்டு, எரியும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க கைகோர்ப்போம் வாருங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டெழ ஒன்றிணைந்து செயல்பட, அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க உங்களை அழைக்கிறேன் எனவும் பிரதமர் ரணில் கூறியுள்ளார்.

மேலும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இன்று கடிதம் மூலம் பிரதமர் ரணில் இந்த அழைப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply