புதிய பிரதமராக பதவி ஏற்கும் ரணில்.

0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை புதிய பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் நேற்று மாலை ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் அதிக நேரம் கலந்துரையாடி தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்தும் ஆழமாக பேசப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் போது , பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.

இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நாடக மன்றத்தில் பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் இன்று மாலை 4 மணிக்கு புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பார் என நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply