தமிழக கடலோர பகுதியில் பலத்த பாதுகாப்பு தீவிரம்.

0

இந்தியாவின் நட்பு நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

இதன்பிரகாரம் அங்கு பதற்றம் நிலவுகிறது.

அத்துடன் இலங்கையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலால், அகதிகளுடன் தேச விரோத கும்பல்களும் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால் தமிழக கடலோர பகுதிகளை உஷார் படுத்துமாறு மாநில காவல்துறைக்கு மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் நேற்று பேருந்தில் சென்று கொண்டிருந்த கைதிகள் 58 பேர் தப்பி ஓடினர்.

இந்தக் கைதிகள் கடல் வழியாக இந்தியாவுக்கு ஊடுருவ வாய்ப்புள்ளதாலும், விடுதலைப்புலிகள், போதைப்பொருள் கும்பல்கள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மத்திய உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலோர பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply