கடலூரில் ஏற்பட்ட பெரும் பதற்றம்.

0

கடலூர், பெரியகுப்பம் பகுதியில் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் காவற்துறையினர் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் கடலூர் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு கொள்ளை அடிப்பதற்காக 20 பேர் திட்டமிட்டு வந்தனர்.

அவர்கள் வருவதாக தகவல் கிடைத்த காவற்துறையினர் கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கொள்ளையர்கள் காவற்துறையினர் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது 6 பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதில் 3 பெட்ரோல் குண்டுகள் மட்டுமே வெடித்த நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் வெடிக்காத பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றிய காவற்துறையினர் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply