குடி வரவு குடியகல்வு திணைக்களம் விடுத்த அவசர கோரிக்கை.

0

இலங்கையில் சட்ட ஒழுங்கு முறையாக உறுதிப்படுத்தப்பட்டால் உடன் அமுலுக்கு வரும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சிலர் நாட்டை விட்டு வெளியேறுவதாக பேசப்படுகின்றது.

இதனால் தனது அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அந்த தொழிற் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தமது கடமைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் நாட்டில் சட்டம் ஒழுங்கை உடனடியாக நிலைநாட்டி, தனது அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, சபாநாயகர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரிடம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply