நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் நாளை முதல் சில சேவைகளை விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அனைத்து விமான நிலையங்களிலும் விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



