பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் பிரதி சபாநாயகர் பதவிக்காக ஆளும் தரப்பில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், தமன்னா சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா பரிந்துரைத்தார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அதனை வழிமொழிந்தார்.
அபார பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒருவருக்கு மேற்பட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அதற்கான வாக்கு சீட்டைப் பெற்று , நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்கினை அளிக்குமாறு சபாநாயகர் அறிவித்தார்.
இதன் பிரகாரம், வாக்குசீட்டில் தாம் ஆதரவு அளிக்க விரும்பும் உறுப்பினரின் பெயரை குறிப்பிட்டு, அதற்கு எதிரே வாக்களிக்கும் உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும் என சபாநாயகர் அறிவித்து இருந்தார்.
இதன் மூலமாக இரகசியத் தன்மையை பேண முடியாது என்பதால் அதற்கு பதிலாக இலத்திரணியல் வாக்கெடுப்பு நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இருப்பினும் ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களை அடுத்து, பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்களிப்பு ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.



