4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது.

0

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அரசுத்துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்தது.

அத்துடன் ஏப்ரல் 29-ந் தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை இடம்பெற்றது.

அதன்பிறகு அரசு விடுமுறை வந்ததால் சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் நாளை சட்டசபை கூடுகிறது.

நாளைய கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீது எம்.எல்.ஏ.க்கள் பேச உள்ளனர்.

6-ந்தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 7ந் தேதி திட்டம், வளர்ச்சி, பொதுசிறப்பு திட்ட செயலாக்கம் நிதி, மனிதவளம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

மே 9, 10 ஆகிய 2 நாட்களில் முதல்-அமைச்சரின் துறையான போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

தீயணைப்பு துறை, மதுவிலக்கு உள்துறை சம்பந்தப்பட்டவை குறித்தும் இதில் இடம் பெறுகிறது.

காவற்துறையினர் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் பேசும்போது அவற்றுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது பதில் அளிப்பார்.

அன்றையதினம் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னென்ன குறைகளை சுட்டிக்காட்டி பேசுவார் என்பதை அறிந்து அதற்கேற்ப பதில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

விவாதத்தின் இறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார்.

இதன்பிரகாரம் நேற்று கோட்டைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் நடைபெற உள்ள துறைகளின் அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply