இலங்கையில் எரிபொருளிற்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் மற்றும் களஞ்சியசாலைகளில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் புகையிரதங்கள், அரசாங்கத்திற்கு சொந்தமான பௌசர்கள் மற்றும் தனியார் பௌசர்களைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



