நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணத்தினால்
சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் சில வாரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளாந்தம் பெருந்தொகையான சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் சமையல் எரிவாயு தாங்கிய மேலும் ஒரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
அந்த கப்பலில் சுமார் 3,500 மெற்றிக் டன் சமையல் எரிவாயு அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.