சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் நாடளாவிய ரீதியில் திரிபோஷா விநியோகம் செய்யப்படுவதில்லை என பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மை உள்ளாகும் நிலை அதிகமாக உள்ளது.
அத்துடன் முதல் சில மாதங்களில் மாத்திரமே திரிபோஷா கிடைத்ததாக அப் பகுதி கர்ப்பிணி தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் லங்கா திரிபோஷ நிறுவனத்திடம் வினாவிய போது,
மூலப்பொருட்கள் பற்றாக்குறையினால் 03மாதங்களுக்கு திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினரொருவர் தெரிவித்தார்.



