அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியதாகியுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதி பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை தீர்மானிக்கும் நோக்கில் அரசாங்கம் அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆழமாக பரிசீலிக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.



