நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும்.
அவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் மின்னல் தாக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



