அரசாங்கத்துக்கு எதிராக தற்போது பல இடங்களில் பல்வேறு வகையான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்ட களத்துக்கு சீருடையுடன் சென்று ஆதரவு தெரிவித்த காவல்துறை சார்ஜெண்ட் குறித்த பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் குட்டிகல காவல் நிலையத்தில் பணியாற்ற வந்த காவல்துறை சார்ஜன்ட் டபிள்யூ. எம். அமரதாச காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலத்துக்கு சென்றிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் கடந்த 14ஆம் திகதி வரை காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு துறைமுக காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
இதன் பின் மறுநாள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் அவர் தற்போது பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



