இலங்கையின் புதிய நிதி அமைச்சர்.

0

நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோட்டாபயவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், அமைச்சர்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிதியமைச்சர் பதவிக்கு பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரிடம் ஜனாதிபதி இன்று காலை கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறப்படுகின்றது.

இருப்பினும் இவர்கள் வர்கள் கோரிக்கையை நிராகரித்ததாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நீதியமைச்சர் அலி சப்ரி மாத்திரமே இது தொடர்பில் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இன்று காலை புதிய நிதியமைச்சரை நியமிக்க ஜனாதிபதி எதிர்பார்த்துள்ள நிலையில், நிதியமைச்சராக பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுப்பதில் ஜனாதிபதி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

இலங்கையின் புதிய நிதி அமைச்சராக அலி அலி சப்ரி நியமிக்கப்படவுள்ள அதேசமயம் நிதியமைச்சின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.

Leave a Reply