இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலைவேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் 75 மில்லி மீற்றறுக்கும் அதிகமான மழைவீழ்ச்சி
எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply