உங்கள் வீட்டின் அருகில் சிவன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவருக்கு இரண்டு மண் அகல் தீபங்களை ஏற்றி மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த தீப வழிபாட்டை செய்யலாம்.
என்னுடைய குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்று எல்லாவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று மனம் உருகி பைரவரிடம் பிரார்த்தனை செய்தால், அந்த பைரவர் உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் காவல் தெய்வமாக நின்று காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை. உங்களால் பைரவர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் சரி, வீட்டில் பைரவரை மனதார நினைத்து ஒரு மண் விளக்கில் தனியாக தீபம் ஏற்றி வைத்து அந்த தீபச்சுடரில் பைரவரை ஆவாகனம் செய்து வழிபாடு செய்வதும் நல்ல பலனை கொடுக்கும்.
உண்மையான மனதோடு நம்பிக்கையோடு பைரவரை வழிபாடு செய்பவர்கள் எந்த நேரத்திலும் கைவிடப்பட்டதில்லை.
அடுத்தபடியாக பைரவரை நினைத்து குலதெய்வத்தை நினைத்து பணம் வீண் விரயம் ஆக கூடாது என்று இந்த முடிச்சை தயார் செய்து உங்கள் வீட்டில் வைக்க வேண்டும். ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் 1 கைப்பிடி அளவு உளுந்து வைத்து, உளுந்துடன் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து, முடிச்சு போட்டு வரவேற்பறையில் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம்.
இந்த உளுந்து முடிச்சு பண விரயத்தை குறைக்கும். சேமிப்பை அதிகரிக்கும்.
6 மாதத்திற்கு ஒருமுறை இந்த பழைய உளுந்தை எடுத்து பறவைகளுக்கு இறையாக போட்டுவிட்டு, மீண்டும் புதிய முடிச்சு கட்டி வைப்பது நல்லது. வீட்டில் அடிக்கடி மருத்துவச் செலவு வருகின்றது.
தேவையில்லாமல் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நிலையான வருமானம் இல்லை என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது எல்லாவிதமான பண பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். உங்களுக்கு கடன் சுமை இருந்தாலும் அது படிப்படியாக குறையும்.
நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இரண்டு பரிகாரத்தையும் செய்து பலன் அடையலாம் என்ற கருதுடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.
