தமிழ்,சிங்கள புத்தாண்டு நெருங்கி வருகின்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் தமது பயணங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுள்ளது.
இந்நிலையில் குற்றவாளிகள் தகவல்களை எடுத்துக்கொண்டு சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண மேலும் கூறினார்.
அத்துடன் இதுபோன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் சேர்ப்பதால் குற்றச்செயல்களில் பலியாக நேரிடும் என்றும் அவர் கூறினார்.
ஆகவே அனைவரும் குறித்த விடயத்தில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



