நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினமும் மின்துண்டிப்பை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடு ஆனைக்குழுவினால் அனுமதி வழங்கப்படுள்ளது.
இதன் பிரகாரம் இன்று A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணிநேரம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
P, Q, R, S, T, U, V, W வலயங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 50 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



