உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை.

0

உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றின் தீவிரம் குறைவடைந்து வருகின்றது.

இந்நிலையில் கொரோனாத் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது போலியான கருத்தாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஒமைக்ரொன் திரிபானது பலவீனமான வைரஸ் திரிபாகும்,

அத்துடன் இந்த கொரோனா திரிபானது கடைசி திரிபாகும் என்பது போலியான கருத்துக்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதே சிறந்த தீர்வாகும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply