பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் உயர்வு.

0

இலங்கையில் பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை நிலவி வருகின்றது

இதன் பிரகாரம் மூலப்பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரிசியை பொதியிடப் பயன்படுத்தும் பை ஒன்றின் விலையை 35 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரிசி பை உற்பத்தியார்கள் முன்னர் அறிவித்திருந்தனர்.

Leave a Reply