நாட்டில் மின் கட்டணத்தினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டதுடன், இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.



