நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அடுத்த இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என குறிப்பிடப்படுள்ளது.
தற்போது அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தேவையான டீசல் மற்றும் பெற்றோல் இருப்பு நிரப்பப்பட்டள்ளதாகவும்
புதிய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.
மேலும் எரிபொருளை பெற்று விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நாளை (09) அல்லது நாளை மறுதினம் அவை விநியோகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.



