மருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என்றால், பிரச்சினையை மறைக்காமல், பொதுமக்களின் பாதுகாப்புக்காக மருந்துகளுக்கான மனிதாபிமான உதவியைப் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது தனியார் மருந்தகங்களுக்கு மருந்துகளை வழங்கும் 60 வீதமான களஞ்சியசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது ,
மேலும் மீதமுள்ளவை 4 முதல் 6 வாரங்களில் மூடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.



