சென்னை வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.

0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 4ஆம் தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 4 ஆம் தேதி கடலூர் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின்னர் இலங்கை – தமிழக கடற்கரை நோக்கி நகரலாம் என்பதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply