கிளிநொச்சியில் வீதியோரத்திலிருந்து இன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த சடலம் கிளிநொச்சி A9 வீதியில் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியின் வீதியோரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் வருகின்றனர்.



