க.பொ.த உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தமக்கென பரிந்துரைக்கப்பட்ட அனைத்துப் பாடங்களையும் பூர்த்தி செய்தவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசியின் இரண்டாம் டோஸை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் நாட்டில் தற்போது பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருவதாக தொற்று நோய் பிரிவின் பிரதம விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் உடனடியாக தடுப்பூசியின் இரண்டாம் டோஸை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுஇத்தப்பட்டுள்ளது.

Leave a Reply