சனி தோஷம் விலக இந்த வன்னி மர குச்சியை வைத்து எளிமையான ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள்.

0

முதலில் நாட்டு மருந்து கடைகளில் வண்ணிமரபட்டை அல்லது வன்னி மர குச்சி என்று கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு சிறிதளவு எள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கிராம தேவதை கோவிலுக்கு சென்று, அங்கு பொங்கல் வைப்பதற்கு முன்னர் மண்ணில் கையில் எடுத்து வந்த எள்ளை பரப்பிவிட வேண்டும்.

பிறகு அதன் மீது அடுப்பை தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் வன்னி மர குச்சிகளை அடுக்கி வைத்து, அதில் நல்லெண்ணெய் சேர்த்து, கற்பூரம் வைத்து, தீபம் ஏற்றி பொங்கல் வைக்க ஆரம்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவானின் கோபத்தை குறைக்க முடியும். பின்னர் உங்கள் கிராம தேவதையை வணங்கி, சனியின் பிடியில் இருந்து நம்மை காக்க வேண்டுமென வேண்டிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் ஒரு கிராமத்திற்குள் நுழைவதற்கு முன்னர் எந்த ஒரு தேவதையாக இருந்தாலும் கிராம தெய்வத்திடம் அனுமதி வாங்கிய பின்னர்தான் உள்ளே நுழைய வேண்டும்.

அது போல அவர்களின் அனுமதி இல்லாமல் நிலையாக அந்த கிராமத்திலும் இருக்க முடியாது.

எனவே கிராம தேவதையின் அருள் நமக்கு இருந்தால் சனிபகவானின் பிடியிலிருந்து சீக்கிரம் விடுதலை கிடைக்கும்.

Leave a Reply