யாழில் மிக பிரபலமான கோவிலில் நடந்த அசம்பாவிதம்.

0

யாழில் மிக பிரபலமான ஆலயங்களில் ஒன்றான வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்தது.

குறித்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள் களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவற்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு களவாடப்பட்ட சங்கிலிகள் 81/2 பவுண் நிறையுடையவை என அதனை பறிகொடுத்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply